கரூர், டிச. 15: கரூர் சோமூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம் சோமூர் ஊராட்சிப் பகுதியில் துணை சுகாதார நிலையம் மட்டுமே செயல்படுகிறது. அரசு மருத்துவமனை மண்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதனால், அவசர காலங்களில் மருத்துவமனை செல்ல கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சோமூர் ஊராட்சியை சுற்றி 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆயிரகணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, இந்த பகுதி மக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக் கொண்டு வர வேண்டும். மேலும், கால்நடைகள் நலன் கருதி கால்நடை மருத்துவமனையும் அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.